top of page

சிவலிங்கத்தில் வழிந்த இரத்தம்கண்ணப்ப நாயனாரின் கதைக்கு வழிவகுத்த மர்மம்

  • Writer: Gold Plating Art Studio LLP
    Gold Plating Art Studio LLP
  • 2 days ago
  • 4 min read
Kannappa Nayanar witnessing blood flowing from the Shiva Lingam, a powerful moment from the sacred story of Kannappa’s devotion, symbolizing unconditional love, selfless devotion, faith, sacrifice, and devotion to Lord Shiva.

பொத்தப்பி மலைநாட்டு வேடர் குலத் தலைவன்

பொத்தப்பி என்னும் மலைநாட்டில் வேடர் குலத்தில் பிறந்தவர்தான் திண்ணனார். வேடர் குலத் தலைவராக விளங்கிய இவர், தினமும் காட்டுக்குச் சென்று வேட்டையாடிக் கொண்டு வருவார். தான் ஒருவரே அனுபவிக்காமல், அவ்வாறு கிடைக்கும் இறைச்சியை தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து அளிப்பதே அவருடைய வழக்கமாக இருந்தது.


மலை உச்சியில் ஒரு எதிர்பாராத சந்திப்பு

ஒருமுறை நண்பர்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற திண்ணனார், வேட்டையை முடித்து மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஒரு மலை அவரைக் கவர்ந்தது. "இத்தனை நாட்கள் காடுகளில் சுற்றிய எனக்கு இந்த மலை மீது ஏறிப் பார்க்கத் தோன்றவில்லையே… அங்கு என்னதான் இருக்கும்? சென்று பார்க்கலாம்" என்று நினைத்தவராய் மலை மீது ஏறினார். அடர்ந்த மரங்களுக்கிடையே ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். அவரை அறியாமலேயே அந்த லிங்கத்தின் மீது அன்பு பொங்கியது.

லிங்கத்தின் மேல் புதிதாக சாற்றப்பட்ட பூக்களையும் இலைகளையும் கண்ட அவர் ஆச்சரியப்பட்டார். "யாரோ சிவனுக்குத் தினமும் பூக்கள் சாற்றுகிறார்கள். ஆனால் உணவு படைக்கத் தவறியுள்ளனர். இக்காட்டில் தனித்திருக்கும் இவருக்குப் பசி எடுக்காதோ?" என்று எண்ணிய திண்ணனார், மலையிலிருந்து இறங்கி, நண்பர்கள் வேட்டையாடி சுட்டு வைத்திருந்த பன்றிக் கறியிலிருந்து சுவையான பகுதியை கையில் எடுத்துக் கொண்டார். அருகில் ஓடிக்கொண்டிருந்த பொன்முகலி ஆற்றங்கரைக்குச் சென்று வாயில் நீரை அடக்கிக் கொண்டு, மலைக்கு ஓடினார்.


மாமிசம் பிரசாதமானது

வாயில் அடக்கி வந்த தண்ணீரை லிங்கத்தின் மீது உமிழ்ந்து, கொண்டு வந்த பன்றிக் கறியை ஆவுடையின் மேல் வைத்து "சாப்பிடு…" என்று சொல்லி நின்ற திண்ணனாரின் செயலைக் கண்ட நண்பர்களுக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால் இது ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல், தினமும் நடந்தது. நாள் செல்லச் செல்ல சிவன் மேல் திண்ணனாருக்கு தீராத பற்று உருவானது.


Kannappa Nayanar offering raw meat to Lord Shiva as an act of pure and unconventional devotion, symbolizing unconditional love, sincere faith, selfless worship, and the power of true devotion beyond traditional rituals.

இரவில் சிவபெருமான் தனித்திருப்பதால் கொடிய விலங்குகளால் அச்சம் நேரிடுமோ என்று அஞ்சிய திண்ணனார், அந்த இடத்திலேயே காவலாக இருந்து, விடிந்ததும் தன் வீட்டிற்குச் செல்வார்.


வேதியரின் புகார்

தினமும் சிவலிங்கத்திற்கு அபிஷேகமும் பூஜையும் செய்து வந்த வேதியர், ஆவுடையின் மேல் பன்றிக் கறி இருப்பதைக் கண்டு துடித்தார். "பெருமானே… தினமும் நான் உனக்கு அபிஷேகம், ஆராதனை செய்கிறேன். ஆனால் உன்னைப் பிடிக்காத எவனோ ஒருவன் இவ்வாறு மாமிசம் படைக்கும் செயலைச் செய்து வருகிறான். அவனை நீரே தண்டிக்க வேண்டும்" என்று சிவனிடம் முறையிட்டார்.

அன்றிரவு வேதியரின் கனவில் தோன்றிய சிவபெருமான், "வேதியரே, உன்னைப் போலவே அவனும் என் பக்தன். தனக்குத் தெரிந்த வகையில் அவன் என் மீது அலாதி பக்தி கொண்டு என்னைப் பூஜிக்கிறான். இதில் தவறு ஏதும் இல்லை. அவனுடைய அன்பை நான் உனக்கு உணர்த்துகிறேன். இன்றிரவு என் இருப்பிடத்திற்கு வந்து மறைந்து நின்று நடப்பதைக் கவனி" என்று கூறி மறைந்தார்.

வேதியரும் சிவனின் கூற்றுப்படி, அன்றிரவு சிவலிங்கத்திற்கு அருகிலிருந்த மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று கவனிக்கத் தொடங்கினார்.


கண்களை தயக்கமின்றி கொடுத்த தருணம்

வழக்கம் போல் கையில் மாமிசத்துடனும் வாயில் நீருடனும் வந்த திண்ணனார், வாயிலிருந்த நீரை சிவபெருமான் மீது துப்பும் நேரத்தில், சிவனின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டார். இதைக் கண்ட திண்ணனாரின் மனம் பதறியது. "ஐயோ… சிவபெருமானின் கண்களிலிருந்து இரத்தம் வடிகிறதே, இதற்குக் காரணம் யாராக இருக்கக்கூடும்?" என்று பதறியவர், ஒரு கணமும் யோசிக்காமல் தன் அம்பால் தன் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து, சிவபெருமானின் கண் இருந்த இடத்தில் பொருத்தினார். உடனே இரத்தம் வடிவது நின்றது.


Kannappa Nayanar offering his eyes to Lord Shiva in an act of supreme devotion, symbolizing unconditional love, complete surrender, unwavering faith, selfless sacrifice, and the power of true devotion.

ஆனால் சிறிது நேரத்திலேயே சிவனின் மற்றொரு கண்ணிலிருந்தும் இரத்தம் வடியத் தொடங்கியது. திண்ணனார் சிறிதும் தயங்காமல் தன் இரண்டாவது கண்ணையும் தோண்டி எடுக்க நினைத்தார். தன் பார்வை முழுவதுமாகப் போனாலும், சிவனுக்கு இன்னொரு கண்ணை சரியான இடத்தில் பொருத்த முடியாது என்று எண்ணிய அவர், தன் காலின் கட்டை விரலால் சிவனின் இரண்டாவது கண் இருந்த இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டு, தன் மறு கண்ணையும் தோண்ட முற்பட்டார்.

அந்த தருணத்தில், "திண்ணனாரே, நில்!" என்று அசரீரி ஒலித்தது. சிவபெருமான் திண்ணனார் முன் காட்சி தந்து, "திண்ணனாரே… உன் பக்தியைக் கண்டு பிரமித்துவிட்டேன். உன் பார்வை போனாலும் பரவாயில்லை என்று நினைத்து உன் கண்களையே எனக்குத் தர நினைத்த நீ, இன்றிலிருந்து 'கண்ணப்பன்' என்று அழைக்கப்படுவாய். எப்போதும் நீ என் அருகினிலேயே இருப்பாய்" என்று கூறி, அவருக்குச் சிவபதத்தை அளித்தார்.

இதை மறைந்திருந்து பார்த்த வேதியரும் கண்ணப்பரின் பக்தியை நினைத்துப் பிரமிப்படைந்ததுடன், கண்ணப்ப நாயனாரின் அருளையும் பெற்றார்.


பெயர் பெற்ற வரலாறு

சிவபெருமானுக்குத் தன் கண்களையே தாரை வார்த்துக் கொடுத்ததால், திண்ணனார் "கண்ணப்பன்" என்று அழைக்கப்பட்டார். கல்வி இல்லை, சாஸ்திரம் தெரியாது, சடங்கு முறை அறியாத ஒரு வேடன், தன் அறியாமையிலும் தூய்மையான அன்பினால் இறைவனையே வென்றெடுத்த கதை இது. இறைவனுக்கு வேண்டியது சடங்கின் சரியான முறை அல்ல பக்தனின் உள்ளத்தின் உண்மை.

இன்றளவும் காளஹஸ்தி கோயிலில் கண்ணப்ப நாயனாரின் இந்த தியாகத்தின் நினைவாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன, அவருடைய பெயர் பக்தி வரலாற்றில் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சிவலிங்கத்தில் ஏன் இரத்தம் வந்தது?

கண்ணப்ப நாயனார் பற்றிய பாரம்பரியக் கதையில், சிவபெருமான் கண்ணப்பரின் பக்தியைச் சோதித்ததாகக் கூறப்படுகிறது. சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்த கண்ணப்பர், சிவபெருமானுக்கு காயம் ஏற்பட்டதாக நம்பினார்.

கண்ணப்ப நாயனார் சிவபெருமானின் சிறப்புமிக்க சைவ பக்தராக போற்றப்படுகிறார். இவர் பாரம்பரியமாகப் போற்றப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது கதை அளவற்ற மற்றும் நிபந்தனையற்ற பக்திக்காக நினைவுகூரப்படுகிறது.

கண்ணப்பர் உடனடியாக சிவபெருமானுக்கு உதவ முயன்றார். சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு, அதை உண்மையான காயமாகக் கருதி தனது ஒரு கண்ணையே அர்ப்பணித்தார்.

கண்ணப்பரின் செயல் முழுமையான பக்தியால் உந்தப்பட்டது. தனது கண்ணால் சிவபெருமானின் காயமடைந்த கண்ணை குணப்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். அதற்காக தனது கண்ணைத் தியாகம் செய்வதையும் அவர் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டார்.

பாரம்பரியக் கதையின்படி, கண்ணப்பர் தனது இரண்டாவது கண்ணையும் அர்ப்பணிக்கத் தயாரானபோது, சிவபெருமான் தோன்றி அவரைத் தடுத்து, அது தனது பக்தியைச் சோதித்த தெய்வீகச் சோதனை என்பதை வெளிப்படுத்தினார்.

பக்தி மரபில், சிவலிங்கத்திலிருந்து இரத்தம் தோன்றியது கண்ணப்பரின் பக்தியைச் சோதிக்க சிவபெருமான் நடத்திய தெய்வீகச் சோதனையின் ஒரு பகுதியாக புரிந்துகொள்ளப்படுகிறது. இது வரலாற்றுச் சம்பவமாக அல்லாமல், பக்தி மற்றும் ஆன்மிகச் செய்தியை எடுத்துரைக்கும் பாரம்பரியக் கதையாகும்.

இரத்தம் கண்ணப்பர் எதிர்கொண்ட தீவிரமான பக்திச் சோதனையை குறிக்கிறது. உண்மையான பக்தி வழக்கமான விதிமுறைகள் மற்றும் சடங்குகளையும் தாண்டி உயரக்கூடும் என்ற நம்பிக்கையையும் இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது.

கண்ணப்பர் தனது மனதில் சிவபெருமானுக்கு பிடிக்கும் அல்லது உதவும் என்று நினைத்த அனைத்தையும் உண்மையான அன்புடன் அர்ப்பணித்தார். முறையான சடங்கு அறிவைவிட உள்ளத்தின் தூய்மையான பக்தியே அவரது வழிபாட்டின் அடிப்படையாக இருந்தது.

இந்தக் கதை உண்மையான பக்தி அன்பு, நேர்மை மற்றும் முழுமையான சரணாகதியிலிருந்து உருவாகிறது என்பதை எடுத்துரைக்கிறது. சிவபெருமானிடம் கண்ணப்பர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது செயல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆம். கண்ணப்ப நாயனார் பாரம்பரியமாக சிவபெருமானின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

கண்ணப்ப நாயனாரின் கதையில் சிவலிங்கம் முக்கிய இடம் பெறுகிறது. சிவலிங்கத்தின் முன்பாகவே அவர் தனது அளவற்ற பக்தியை வெளிப்படுத்தினார். சிவபெருமானுக்கு துன்பம் ஏற்பட்டதாக அவர் நம்பியபோது, அதைத் தீர்க்க தனது உயிரையே அர்ப்பணிக்கத் தயாரானார்.

பாரம்பரிய வெண்கல சிவலிங்கத்தின் சிறப்பு அதன் ஆன்மிக குறியீடு, பாரம்பரிய கைவினைத் திறன், நீடித்த தன்மை கொண்ட வெண்கலம் மற்றும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் உள்ளது. திறமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிலை, பாரம்பரிய இந்தியச் சிற்பக்கலையின் தனித்துவத்தையும் அழகையும் பாதுகாக்கிறது.


Comments


bottom of page